12ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை... காமகொடூரன் மீது பாய்ந்தது போக்சோ..! - Seithipunal
Seithipunal


பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து மினி பஸ் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் அந்த பகுதியில் உள்ள மினி பஸ் டிரைவராக வேலை செய்து. அவரது பஸ்ஸில் அடிக்கடி பயணம் செய்யும் பிளஸ் 2 மாணவியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அந்த மாணவியிடம் அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை அந்த மாணவியும் நம்பியுள்ளார் இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

இதனால் கர்ப்பம் அடைந்த அந்த மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த செயல்களை கண்டு சந்தேகம் அடைந்த அவரது நான் யார் தனது மகளிடம் பள்ளிக்கு செல்லாத காரணம் குறித்து கேட்டுள்ளார்.

அப்பொழுது நடந்த சம்பவம் அனைத்தையும் தனது தாயிடம் கண்ணீர் மல்க அந்த மாணவி கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மினி பஸ் டிரைவர் தங்க பாண்டியன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Driver arrested for sexually abusing schoolgirl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->