கொலைகார கந்துவட்டி செயலிகளை தடை செய்க - மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள்.!
Dr Ramadoss Request to Ban Online Loan Applications 23 December 2020
கொலைகார ஆன்லைன் கந்து வட்டிசெயலிகளை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆன்லைன் கடனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட மதுராந்தகம் இளைஞரின் இழப்பிற்கு குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " ரூ.4,000 கடனை திரும்பச் செலுத்தாததற்காக ஆன்லைன் செயலி கந்துவட்டி நிறுவனம் அவமானப்படுத்தியதால், மனமுடைந்த மதுராந்தகத்தைச் சேர்ந்த விவேக் என்ற இளைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
தந்தையின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலையில் விவேக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கந்து வட்டி நிறுவனம் திட்டியுள்ளது. அவர் திருடன் என்று நண்பர்களிடம் பொய்பரப்புரை செய்துள்ளது. அதுவே தற்கொலைக்கு காரணம்.
ஆன்லைன் செயலி கந்துவட்டி நிறுவனங்களின் இந்தக் கொடுமையால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த செயலிகளை தடை செய்ய வேண்டும் என ஏற்கனவே நான் வலியுறுத்தியுள்ளேன். எனவே இனியும் தாமதிக்காமல் கந்துவட்டி செயலிகளை தடை செய்ய வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Dr Ramadoss Request to Ban Online Loan Applications 23 December 2020