மத்திய அரசு இந்த முயற்சியை கைவிட வேண்டும்.. கோரிக்கை வைக்கும் இராமதாஸ்.!!
dr ramadoss report about RK singh announce electric problem
தமிழகத்தின் மின்சார வாரியம் அதிக கடன் சுமையில் சிக்கி தவிக்கும் காரணத்தால், மின் திட்டங்கள் தொடர்பாக வழங்கப்படும் கடனுதவியை மத்திய அரசு நிறுத்தக்கூடாது என்று கூறி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மரு.இராமதாசு அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசுத்துறைகளிடம் இருந்து மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டியிருக்கும் மின்கட்டணத்தினை வரும் 3 மாதத்திற்குள் அளிக்காத பட்சத்தில், தமிழகத்தின் மின் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கி வரும் கடனுதவிகளை நிறுத்தப்போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த எச்சரிக்கையை மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் விடுத்த நிலையில், குறைந்த விலைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம், 100 யூனிட் இலவச மின்சாரம், உழவர்களுக்கு இலவச மின்சாரம் போன்ற திட்டத்தால் இங்கு பல மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.
மின்சாரம் வழங்குவதில் மணிலா அரசுக்கு வருடத்தில் 8 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு கடனுதவி வழங்கும் திட்டத்தினை கைவிட்டு, மின்சார வாரிய நிதிநிலையை மேம்படுத்த உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
dr ramadoss report about RK singh announce electric problem