#Breaking: மரு. இராமதாசை பேரதிர்ச்சி சோகத்திற்கு உள்ளாக்கிய மரணம்.!!  - Seithipunal
Seithipunal


கோ. குணசீலபூபதி மறைவுக்கு மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரைச் சேர்ந்த எனது அன்புக்குரியவரும், சமூக முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளருமான ஆசிரியர் கோ. குணசீலபூபதி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

கோ. குணசீல பூபதி சிறந்த பண்பாளர். வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்திலிருந்தே இயக்கப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். என் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். தருமபுரிக்கு செல்லும் போதெல்லாம் அவரது இல்லத்திற்கு சென்று இளைப்பாறிச் செல்வது எனது வழக்கமாகும்.

தாம் வாழ்ந்த பகுதியில் உள்ள மாணவர்களுக்கு கல்வி - வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சமூக முன்னேற்ற சங்கத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Regret Tiruvannamalai Chengam K GunaseelaBoopathy Passed Away 12 May 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->