தவறே நடைபெறாமல் இருக்க.. கடுமையான தண்டனை.. இராமதாசு வேண்டுகோள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுமதுரை பகுதியை சார்ந்தவர் ஜெயபால். இவரது மகளின் பெயர் ஜெய ஸ்ரீ (வயது 15). சிறுமி ஜெய ஸ்ரீ அங்குள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், இவரது பெற்றோர் நேற்று வெளியூருக்கு சென்றுள்ளார். 

சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்த நிலையில், வீட்டில் இருந்து கரும் புகை அதிகளவு வெளியேறுவதை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கண்டுள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்க்கையில், தீப்பற்றி உடல் முழுவதும் எறிந்த நிலையில், சிறுமி அலறியுள்ளார். 

இதனையடுத்து இவரை மீட்டு அங்குள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதிக்கவே, சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நேரில் விரைந்த நீதிபதியிடம் இதே கிராமத்தை சார்ந்த கணபதி என்பவனின் மகன் முருகன் (வயது 51) மற்றும் கந்தசாமி என்பவனின் மகன் யாகசம் என்ற கலியபெருமாள் (வயது 60) பெட்ரோல் ஊற்றி எரித்தாக கூறியுள்ளார்.

பின்னர் மேல் சிகிச்சைக்கு சிறுமி சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் முருகன் மற்றும் கலியபெருமாளை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு, தனது ட்விட்டர் பக்கத்தில், " விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. இது கொடூரமான செயல். ஜெயஸ்ரீயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

ஆயிரம் முன்பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அது இத்தகைய கொடியவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss regret about Villupuram child jayashree murder


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->