மருத்துவர் ராமதாஸை வேதனையில் தள்ளிய மரணம்!  - Seithipunal
Seithipunal


உடன்பிறவா சகோதரி கோமதியம்மாளின் மருமகளும், வழக்கறிஞர் இராஜனின் மனைவியுமான ஜெயலட்சுமி காலமான செய்தியை அறிந்து மிகுந்த வேதனையுற்றதாக மருத்துவர் இராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மதுரையைச் சேர்ந்த எனது உடன்பிறவா சகோதரி கோமதியம்மாளின் மருமகளும், வழக்கறிஞர் இராஜனின் மனைவியுமான ஜெயலட்சுமி நேற்று (14.02.2021) காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த  வேதனை அடைந்தேன்.

பாட்டாளி மக்கள் கட்சியிலும், வன்னியர் சங்கத்திலும் கடந்த 40 ஆண்டுகளாக துடிப்புடன் பணியாற்றி வருபவர் கோமதி அம்மாள் ஆவார். சங்க காலத்திலும், அதற்குப் பிறகும் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்றி, ஆணுக்கு இணையான பெண் போராளியாக மதுவிலக்குக்கு ஆதரவாகவும், சமுதாயப் பிரச்சினைகளுக்காகவும் போராடி வருபவர் கோமதியம்மாள். என் மீது மிகுந்த பற்று கொண்டவர். அவரைப் போலவே அவரது மருமகள் ஜெயலட்சுமியும் என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். 52 வயது மட்டுமே ஆன ஜெயலட்சுமி அதற்குள் மறைந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

ஜெயலட்சுமியை இழந்து வாடும் அவரது குழந்தைகள், கணவர் வழக்கறிஞர் இராஜன், மாமியார் கோமதியம்மாள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Feeling Extreme Sad due to Madurai Gomathiyammal Son wife Passed Away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->