மு.க ஸ்டாலின் நினைப்பது கனவில் கூட நடக்காது - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மாஸ் பேச்சு..! - Seithipunal
Seithipunal


வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீட்டை அழிக்க மு.க ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார், அது கனவில் கூட நடக்காது என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து எடப்பாடி தொகுதி ஜலகண்டாபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உரையாற்றினார். 

இந்த பிரச்சாரத்தில் பேசுகையில், " மு.க ஸ்டாலினுக்கு கலைஞரின் மகன் என்ற தகுதியை தவிர எந்த தகுதியும் கிடையாது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயி என்ற மிகப்பெரிய தகுதி இருக்கிறது. விவசாயி, விவசாயிகளின் கஷ்டம் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாக தெரியும். மு.க ஸ்டாலினுக்கு விவசாயம், சரித்திரம், வரலாறு, இடஒதுக்கீடு, சுதந்திர நாள், குடியரசு நாள், கணக்கு என்று எதுவுமே தெரியாது. 

என்னுடன் விவாதம் செய்ய பலமுறை அழைத்தேன். மு.க ஸ்டாலின் வரவில்லை. நமக்கான 10.5 இட ஒதுக்கீட்டை அழிக்க துடித்துக்கொண்டு இருக்கிறார். அது கனவில் கூட நடக்காது. கிளை செயலாளர், மாவட்ட செயலாளர் என்று பல பதவிகள் வகித்து, உழைப்பால் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வந்துள்ளார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மீதே அவர்களின் கட்சியினர் கோபத்தில் உள்ளனர் " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Talks about MK Stalin Plan Dissolve Vanniyar Reservation 27 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->