தர்மபுரிக்கு வந்ததும் எனக்குள் ஏற்பட்ட பேரானந்தம் - உற்சாகத்தில் நெகிழ்ச்சி உரையாற்றிய மருத்துவர் அன்புமணி.!
Dr Anbumani Ramadoss Feeling happy to Sent Pappireddipatti Dharmapuri Election Campaign
தர்மபுரி மண்ணை வந்தடைந்ததும், எனக்குள் ஏற்பட்ட பேரானந்தத்தை விவரிக்க முடியவில்லை என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உருக்கமாக பேசினார்.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி அவர்களை ஆதரித்து, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி கடத்தூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதன்போது, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " தர்மபுரி மாவட்ட மண்ணை மிதித்தவுடன் எனக்கு புத்துணர்ச்சி கிடைத்தது. என் மனதில் விவரிக்க இயலாத உணர்வு வெளிப்பட்டது. எனது அண்ணன்கள், தம்பிகள், சகோதரிகள், தாய்மார்கள் என்னை உற்சாகமாக வரவேற்றார்கள். எனக்கும், எனது அப்பாவுக்கும் மிகவும் பிடித்த மண் இது. இதனை தேர்தல் பிரச்சாரம் என்று கூறினால் அது மிகையாகாது. இது மிகப்பெரிய மாநாடு. இதனை மாநாடாகவே நான் கருதுகிறேன்.
இந்த தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் நாம் இருக்கிறோம். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஏ.கோவிந்தசாமி நிறுத்தப்பட்டுள்ளார். அவரை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். இந்த பிரச்சார கூட்டத்தினை நடத்தும் திரு.வேலுசாமி அவர்களுக்கும், வன்னியர் சங்கம் திரு. அரசாங்கம், சத்தியமூர்த்தி, இமையன், நாகராஜ், சேட்டு, வணங்காமுடி, வடிவேல் ஆகியோருக்கு வணக்கம்.
இங்கு எழுச்சியோடு வெற்றி நிச்சியம் என்று வந்துள்ள எனது தம்பிகள், தங்கைகள், தாய்மார்கள், பாட்டாளி சொந்தங்கள், அதிமுக நிர்வாகிகள், த.மா.கா நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் ஆகியோருக்கு அன்பான வணக்கம். உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி என்று கூறினால் மிகையாகாது.
அதைவிட இது பெரிது. எனது மனதில் சொல்ல முடியாத அன்பு. தற்போது கொரோனா வைரஸ் இல்லையென்றால், உங்களை கட்டியணைத்துக்கொள்வேன். அந்தளவு எனக்கு கீழிறங்கி பிரச்சாரம் செய்ய ஆவலாக இருக்கிறது.இந்த அன்பு அண்ணனின் சிறிய ஆலோசனை. நீங்கள் பத்திரமாக இருக்க வேண்டும். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்களின் உடல் நலம் மட்டுமே எனக்கு முக்கியம். நீங்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும் " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Dr Anbumani Ramadoss Feeling happy to Sent Pappireddipatti Dharmapuri Election Campaign