மு.க ஸ்டாலினின் துடிப்பு ஒருபோதும் நிறைவேறாது - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சூளுரை.! - Seithipunal
Seithipunal


எப்படியாவது முதல்வராக வேண்டும் என்று மு.க ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார். அவரின் துடிப்பு ஒருபோதும் நிறைவேறாது என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது அவர் பேசுகையில், " நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான வெற்றிக்கூட்டணியில், அதிமுக வெற்றி வேட்பாளர் தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் அவர்களை இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். 

சோமசுந்தரம் வெற்றிபெற்றால் மீண்டும் தமிழக முதல்வராக விவசாயி நமக்கு கிடைப்பார். இங்கு வந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் ஆக்சன் கிங் ஏ.கே. மூர்த்தி அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன், அக்ரி நாகராஜன், என்.ஆர்.பழனி, டி.சி துரை, ஹரி, ராஜேந்திரன், பாமக நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், சொந்தங்கள், பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம். 

நாம் ஒருமனதாக அதிமுக வெற்றி வேட்பாளர் சோமசுந்தரத்தை வெற்றியடைய செய்யவேண்டும். இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல். ஒருபுறம் விவசாய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. மற்றொருபுறம் வியாபாரி மற்றும் முதலாளி மு.க ஸ்டாலின். நிச்சியமாக விவசாயி வெற்றியடைய வேண்டும். நமக்கு சோறு போடும் கடவுள் விவசாயி. விவசாயிகளுக்கு நமது முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்துள்ளார். அதற்கு சோமசுந்தரத்திற்கு அமோக வெற்றி கிடைக்க வேண்டும். மக்கள் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும். 

உத்திரமேரூர் தொகுதி ஏரிகள் நிறைந்த மாவட்டம். எடப்பாடி பழனிச்சாமி சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து கடுமையாக உழைத்து முதல்வராக வந்துள்ளார். மு.க ஸ்டாலினுக்கு வரலாறு, சமூக நீதி, சரித்திரம், கணக்கு போன்று எதுவுமே தெரியாது. எப்படியாவது முதல்வராக வேண்டும் என்று மு.க ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார். அவரின் துடிப்பு ஒருபோதும் நிறைவேறாது. எனது தம்பிகளும், தங்கைகளும் தமிழக முதல்வராக மீண்டும் எடப்பாடி பழனிசாமியை பதவியேற்க வைக்க வேண்டும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Election Campaign at Walajabad 20 March 2021 TN Election 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->