முகத்தை சிதைத்து கையை உடைத்து சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை! மர்மநபர்களுக்கு போலீசார் வலை! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் சட்ட மாமேதை அம்பேத்கர் சிலை சேதம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையின் முகத்தை சிதைத்தும் கையை உடைத்தும் மர்ம நபர்கள் சென்றிருக்கிறார்கள். சிலையை சேதம் செய்த மர்ம நபர்கள் யார் என்று விசாரணையை சோழவரம் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

சமீப வருடங்களாக அரசியல் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது வழக்கமான சம்பவங்களாக நடந்து கொண்டிருக்கிறது. வெறுப்பு அரசியலின் உச்சமாகவே இதனை பார்க்க வேண்டியதும் இருக்கிறது. 

வெறுப்பு அரசியல் கலைந்து ஆரோக்கியமான அரசியல் நிலவினால் மட்டுமே மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற நிலையில், நாளுக்கு நாள் வெறுப்பு அரசியல் தான் நடந்து கொண்டிருக்கிறது. சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கினால் மட்டுமே இது போன்ற வெறுப்பு அரசியல் சம்பவங்கள் குறையும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DR Ambedkar statue damged by unknown person in thiruvallur neduvarmbakkam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->