தேர்தல் நேரத்தில் முதுகிலே குத்தும் கட்சி.. திமுகவை பங்கப்படுத்திய விமர்சனம்..? கலக்கத்தில் கழக உடன் பிறப்புக்கள்..!
dmk trolled by admk minister
தி.மு.க.வில் வாரிசு அரசியல் நீடிப்பதால் கழக அணியில் சேர மற்ற கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன என்று திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ பேசினார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் முழுவதும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொகுதி வாரியாகவும், வார்டு வாரியாகவும் நடைபெற்று வருகிறது.
அதன்படி திருவொற்றியூர் பகுதி மணலி 18 மற்றும் 21-வது வட்டங்களில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வட்ட செயலாளர் ஜோசப் தலைமையில், நகர அண்ணா தொழிற்சங்க செயலாளர் முல்லை ஆர்.ராஜேஷ்சேகர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ, கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தி.மு.க என்பது தேர்தல் நேரத்தில் முதுகிலே குத்தும் கட்சி. அதனால் அனைத்து கட்சிகளும் இன்று கழகத்தை நாடி வருகின்றன.
அ.தி.மு.க.வில் தான் சாதாரண விவசாயி கூட முதலமைச்சர் ஆகலாம். ஆனால் தி.முக.வில் தந்தை, மகன் மட்டுமே பதவிக்கு வர முடியும்.
நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும்.
கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் யாரை அடையாளம் காட்டுகிறார்களோ அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள்.
அம்மாவின் நலத்திட்டங்கள் தொடர 40 தொகுதியிலும் கழகம் வெற்றி வாகை சூட சபதமேற்போம் என்று கூறியுள்ளார்.
English Summary
dmk trolled by admk minister