திமுக பிரசன்னா மனைவி தற்கொலை விவகாரத்தில் பேரதிர்ச்சி திருப்பம்.. இதற்குத்தான் தற்கொலை செய்தாரா?.! - Seithipunal
Seithipunal


திமுகவின் செய்தி தொடர்பு பிரிவில் மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து வருபவர் பிரசன்னா. இவர் தன்னை தமிழன் பிரசன்னா என்று அடையாளப்படுத்தி, திமுகவில் பணியாற்றி வருகிறார். 

சென்னையில் உள்ள எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்கு பகுதியில் தனது குடும்பத்தினருடன் இவர் வசித்து வருகிறார். வழக்கறிஞரான பிரசன்னா தனது 35 வயது மனைவி நதியா மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். 

பிரசன்னாவின் மனைவி நதியாவிற்கு இன்று பிறந்தநாள் என்றும் கூறப்படுகிறது. இதனால் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று நதியா பிரசன்னாவிடம் கேட்கவே, கொரோனா காலத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று மனைவியிடம் பிரசன்னா கூறியதாக கூறப்படுகிறது. 

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மன அழுத்தத்தில் இருந்து வந்த நதியா வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நதியாவின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், கொடுங்கையூர் காவல் துறையினர் பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Prasanna wife Suicide Issue Update she want to Celebrate Birthday Prasanna Argue Family Issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->