திமுகவை சுத்தி வளைக்கும் அழகிரி தொண்டர்கள்.! விடமாட்டாங்க போலயே.!  - Seithipunal
Seithipunal


தி.மு.க.வில் மு.க.அழகிரி. தென் மண்டல அமைப்புச் செயலாளராக விளங்கியவர். மேலும், மத்திய மந்திரியாகவும் அவர் பதவி வகித்தவர். திடீரென 2014-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் தி.மு.க. வை விமர்சித்து எப்போதாவது மு.க.அழகிரி கருத்துக்களை தெரிவித்து வருவார். 

மு.க.அழகிரி ஆதரவாளர்கள் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்டனர். தொடர்ந்து அழகிரி புறக்கணிக்ககப்பட்டதால் அரசியல் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பார் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர் அமைதியாகவே இருந்தார். 

இதற்கு நடுவில் அவர் மீண்டும் திமுகவில் இணைவார் என கூறப்பட்டது. ஆனால், இதுவரை அதுபோல எந்த நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவில்லை என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தி.மு.க.வை விமர்சித்து மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மீண்டும் சுவரொட்டி ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த சுவரொட்டியில், "அண்ணே... அண்ணே... அழகிரி அண்ணே... நம்ம கட்சி நல்ல கட்சி. மதுரையில இப்ப ரொம்ப கெட்டுப் போச்சுன்னே...'' என கூறப்பட்டு உள்ளது. இது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk poster in madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->