பதற வைக்கும் காட்சி..! திமுக பிரச்சார வாகனத்தின் முன்பே தீ குளித்த திமுக தொண்டர் - தோலுரிக்கப்பட்ட இரகசியம்..! - Seithipunal
Seithipunal


கடலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் ரமேஷ் தன்னை பண விஷயத்தில் ஏமாற்றிவிட்டதாக கூறி அவரின் பிரச்சார வாகனம் முன்பு திமுக தொண்டர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

 கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் பேர்பெரியான்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி முத்தாண்டிக்குப்பம்.

நெய்வேலியில் இருந்து சுமார் மூன்று கி.மீ தூரத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 850 குடும்பங்கள் உள்ளன. வன்னியர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.

சென்னை - கும்பகோணம் 45C தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளுக்காரன் குட்டை என்ற இடத்திலிருந்து தொடங்கி ஒரு சாலை முத்தாண்டிக்குப்பம் வழியாக விருத்தாசலம் செல்கிறது. இந்த சாலைக்குக்கு வடபுறம் பேர்பெரியான் குப்பம் உள்ளது.

மற்றொரு சாலை நெய்வேலி நகரத்திலிருந்து தொடங்கி முத்தாண்டிக் குப்பம் வழியாக பண்ருட்டி செல்கிறது.சாலைக்கு அருகில் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையம் உள்ளது.

தற்போது பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு திமுக வேட்பாளர் காவல் நிலையம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது, பணம் வாங்கி ஏமற்றிய திமுக பிரமுகரை கண்டித்து, பணம் கொடுத்து ஏமாந்த திமுக தொண்டர் திமுக பிரச்சார வாகனத்தின் முன் தீ குளித்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை கீழே தள்ளி தீயை அணைத்து காப்பாற்றினர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk person fired himself


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->