போதையில் காரை ஒட்டி, பெண் காவல் அதிகாரியிடம் தகராறு செய்த திமுக பிரமுகர்.. காவல்துறை கரார்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி திமுக ஒன்றிய செயலாளராக இருந்து வருபவர் அடைக்கலமணி. இவர் நேற்று மது அருந்திய நிலையில், போதையில் தனது காரை இயக்கி வந்துள்ளார். 

இந்த நேரத்தில், அங்குள்ள வளையப்பட்டி 5 ஆம் எண் சாலையில், போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்து கொண்டு இருந்த நிலையில், இவ்வழியாக வந்த அடைக்கலமணியின் காரையும் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த அடைக்கலமணி போக்குவரத்து பெண் காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரியை அவதூறாக பேசி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து அடைக்கலமணியின் மீது போதையில் காரை இயக்கியது, அரசு ஊழியரின் பணியை தடுத்தது மற்றும் அவதூறாக பேசுவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும், திமுக ஒன்றிய செயலாளர் அடைக்கலமணியின் மனைவி சுதா, பொன்னமராவதி ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk Party Pudukkottai member drunk and drive fight with lady cop


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->