#JustIN: நில அபகரிப்பு புகார் - திமுக ஒன்றிய செயலாளர் கைது..! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் திமுக ஒன்றிய செயலர் தாமஸ் ஆல்வா எடிசன். இவர் வேளாங்கண்ணி பேரூராட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்து வருகிறார். இவரின் மீது அதிமுகவை சார்ந்தவர் ரூ.2 கோடி மதிப்பிலான நிலங்கள் போலி ஆவணங்கள் மூலமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்று புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வேளாங்கண்ணி பகுதியை சார்ந்த வசந்தி என்பவர் தனது தந்தையின் 35 சென்ட் நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் தெரிவித்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வந்துள்ளனர். 

மேலும், வேளாங்கண்ணியை சார்ந்த வசந்திக்கு திமுக பிரமுகர் எடிசன் தனது தம்பி மற்றும் தொண்டர்களுடன் சென்று மிரட்டலும் விடுத்துள்ளார். இதனையடுத்து விசாரணை நிறைவுபெற்று, தாமஸ் ஆல்வா எடிசன் நில அபகரிப்பில் ஈடுபட்டது உறுதியானதை தொடர்ந்து, 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Party Nagapattinam Member Arrest by Police Land Occupy Complaint 19 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->