திமுக பிரமுகர் கொலை வழக்கில்., நேரில் சரணடைந்த குற்றவாளிகள்..! பரபரப்பான நீதிமன்ற வளாகம்.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலையன்கரிசல் பகுதியை சார்ந்தவர் வி.எஸ்.கருணாகரன் (வயது 55). கருணாகரன் தூத்துக்குடி அனல் மின் நிலையம் போன்ற பல்வேறு இடத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணிகளை தொடர்ந்து செய்து வந்து கொண்டு இருந்தார். 

திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வரும் நிலையில்., கடந்த 22 ஆம் தேதியன்று குலையன்கரிசல் பகுதியில் இருக்கும் தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய சமயத்தில்., இவரை இடைமறித்த கும்பலானது சரமாரியாக வெட்டி சாய்த்து தப்பியோடியுள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் மிதந்த இவரை கண்ட மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில்., இவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

died, murder, suicide attempt, killed,

இந்த விசரணையில் ஐந்து பேரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நீதிமன்றத்தில் குலையன்பரிசல் பகுதியை சார்ந்த சக்திவேல் (வயது 20) மற்றும் சரவணன் (வயது 27) ஆகியோர் நேரில் சரணடைந்தனர். 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள்., சரணடைந்த இருவரையும் 2 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து., இருவரும் அங்குள்ள கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk party member killing case culprit arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->