பட்டபகலில் வெட்டி கொலை திமுக பிரமுகர்... காஞ்சிபுரம் அருகே பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகர் கைது வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், கோனேரிகுப்பத்தை சேர்ந்தவர் சேகர். இவர் திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்தார். இந்நிலையில், சம்பவதன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த இளவரசன் என்பவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டார்.

அவரை மீட்ட அக்கம்பக்கதினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்  அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்ட பகலில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK official hacked to death in broad daylight


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->