பாஜகவை எதிர்த்து பேச முடியவில்லை.. சிந்தியுங்கள் மக்களே.. கனிமொழி பேச்சு.!
DMK MP Kanimozhi Speech Virudhunagar Satur 27 December 2020
பாரதிய ஜனதா கட்சியில் இருப்பவர்களை எதிர்த்து பேச தைரியம் இல்லாத ஒரு கட்சியாக அதிமுக அமைந்துள்ளது என்றும், அதன் ஆட்சியும் அப்படியே இருக்கிறது என்றும் திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக எம்.பி கனிமொழி, அதிமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறக் கூடாது என்பதற்காக பலர் திமுகவுக்கு எதிராக நின்று வியூகத்தை வகுத்து வருகின்றனர். அவர்களின் எண்ணங்கள் அனைத்தும் பொய்யாக மாற வேண்டும். மக்கள் உண்மையை புரிந்துகொண்டு திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
DMK MP Kanimozhi Speech Virudhunagar Satur 27 December 2020