அன்று ஜெயலலிதா.,இன்று செல்லூர் ராஜு.!! சட்டப்பேரவையை பிளேகிரவுண்டாக மாற்றிய திமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் முதன் முறையாக தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை புரிந்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை வரவேற்க திமுக உறுப்பினர்கள் கூட்டமாக காத்திருந்தனர்.

Image result for ops seithipunal

அவர்களைப் பார்த்த ஓபிஎஸ் என்ன மரியல் செய்கிறீர்களா என சிரித்துக் கொண்டே கேட்டார். அதற்கு திமுக உறுப்பினர்கள் நீங்கள் சொன்னால் செய்துவிடலாம் என பதிலுக்கு கவுண்ட் கொடுத்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறு துணை முதல்வர் சிரித்துக்கொண்டே கடந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு வரும்பொழுது திமுக சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன், செல்லூர் ராஜு கையை பிடித்து இழுத்து நீங்களும் எங்களுடன் வந்து விடுங்கள் என கிண்டல் செய்துள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட செல்லூர் ராஜு சிரித்துக்கொண்டே அங்கிருந்து நழுவி விட்டார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்எல்ஏக்கள் ஒரு பொறுப்பான சட்டமன்றத்தில் கல்லூரி மாணவர்களைப் போல விளையாடிக் கொண்டிருப்பது பொறுப்பான செயலாகுமா? என அரசியல் விமர்சகர்கள் இதற்கு கருத்து தெரிவிக்கின்றனர்.

Image result for duraimurugan seithipunal

இதை போலவே இதற்கு முன்பு சட்டப்பேரவையில் மறந்த முதல்வர் ஜெயலலிதாவின் சேலைத்தலைப்பை பிடித்து, திமுக பொருளாளர் துரைமுருகன் இழுத்து வம்பிழுத்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk MLA trolls sellur raju in assembly


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->