மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா.. தனியார் ஆஸ்பத்திரியில் ட்ரீட்மெண்ட்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வருகிறது.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்று வரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,49,654 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,89,787 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 6,007 ஆக உயர்ந்துள்ளது.

களப்பணியாற்றிய பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், கரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்த சட்டமன்ற உறுப்பினருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. 

கரூர் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாகவே உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், மருத்துவ சோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA Senthil Balaji test Positive Corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->