கொரோனாவின் கோரப்பிடியில் மேலும் ஒரு திமுக எம்எல்ஏ.!!
dmk mla seethapathy corona positive
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை.
பொதுமக்கள் மட்டும் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட முன்கள பணியாளர்களும் அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால், எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மற்றும் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் ஆகியோர் கொரோனா தொற்றால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதி மற்றும் அவரது கணவன் சொக்கலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
English Summary
dmk mla seethapathy corona positive