கொரோனா உறுதி செய்யப்பட்ட அடுத்த திமுக எம்.எல்.ஏ..! கலக்கத்தில் தலைமை.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் தமிழக அரசு பல கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் கடுமையான அளவு கொரோனா அதிகரித்ததால் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது தமிழகம் முழுவதும் கரோனா வைரஸின் வீரியமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பல மாவட்டங்கள் மீண்டும் கொரோனா பாதிப்பை கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளது. 

அரசியல் கட்சியில் இருக்கும் பலருக்கும் கொரோனா வைரஸ் உறுதியான நிலையில், ஏற்கனவே திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனிற்கு கொரோனா உறுதியாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் ரிஷிவந்தியம் தொகுதி வசந்த் கார்த்திகேயனிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கார்த்திகேயனின் குடும்பத்தினர் ஏழு பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA Karthikeyan and his family members positive corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->