கொலை விவகாரம்., களத்தில் இறங்கிய திமுக எம்எல்ஏ.! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் செல்வம் என்பவர் கடந்த 17ஆம் தேதி கடத்தி கொலை செய்யப்பட்டார். இதில் அதிமுக நிர்வாகி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. நிலத்தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இதற்கு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து, ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். மேலும், அதிமுக பிரமுகர் திருமணம் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் செல்வனின் உறவினர்கள் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும் மற்றும் செல்வனின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் செய்து வருகின்றனர். உடலையும் வாங்க மறுத்துள்ளனர். இந்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவித்து திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளார். 

இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் அனிதா ராதாகிருஷ்ணனின் காரை அடித்து நொறுக்கி இருக்கின்றனர். அவரது காரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk MLA car attacked by unknown 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->