#JustIN: பச்சை துண்டுடன் பச்சை துரோகம் - தமிழக முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு.க ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள குன்னம் கிராமத்தில், திமுக சார்பில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, " பச்சை துண்டை போட்டுகொண்டு பச்சை துரோகம் செய்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. முன்னாள் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இன்று வரை மர்மமாக உள்ளது. இதனை இப்போதைய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமே தெரிவித்து இருந்தார். 

கொள்கை ரீதியில் ஜெயலலிதாவிற்கு நாங்கள் எதிரிதான். எங்களுக்கு எதிரி ஜெயலலிதாதான். ஒருபோதும் மாறுபட்ட கொள்கை உடையவர்கள் தங்களின் கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், அவரின் மரணம் இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது. 

பச்சை துண்டை போட்டுகொண்டு நானும் விவசாயிதான் என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அவர் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பச்சை துரோகம் செய்து இருக்கிறார். 97 பக்கங்கள் கொண்ட முதல்வரின் ஊழல் தொடர்பான விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்த விசாரணை வரும் போது எடப்பாடி பழனிச்சாமியின் ஊழல் தெரியவரும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin Speech at Kanchipuram DMK Grama Saba Meeting 23 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->