#Breaking: "அண்ணாவின் கொள்கைக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமே இல்லை " - மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் முப்பெரும் விழாவில் இணையத்தளம் வழியாக கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், " அண்ணா கலைஞரின் இடத்தை நிரப்ப நான் முயற்சி செய்கிறேன். பேரறிஞர் அண்ணாவிடம் இருந்து கனிவும், கலைஞரிடம் இருந்து துணிவையும் பெற்றுள்ளேன். அண்ணாவின் வழியே நமது வழி. இன்றைய தமிழக ஆட்சியின் அவலங்கள் மக்களுக்கு தெரியும். 

அண்ணாவின் கொள்கையும் அதிமுகவில் உள்ளது என்று கூறுகிறார்கள்.. அண்ணாவுக்கும், அதிமுகவிற்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்து பேட்டியளித்த இருந்தார். அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், " ஆட்டுக்கு தாடி எதுக்கு, நாட்டுக்கு ஆளுநருக்கு எதுக்கு ", அது அண்ணாவின் காலத்தோடு முடிந்துவிட்டது என்று பேசியிருந்தார். 

அண்ணாவின் பெயரிலேயே கட்சி, ஆட்சி நடத்தி வரும் அதிமுக அமைச்சர், அண்ணாவின் ஆட்சியிலேயே அது முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். அதிமுக அமைச்சர் அண்ணா குறித்து விமர்சனம் செய்தது தொடர்பாக அதிமுக தலைமை விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் வராத பட்சத்தில் அவர்கள் கட்சிக்கொடி மற்றும் அலுவகத்தில் இடம்பெற்றுள்ள அண்ணாவின் புகைப்படத்தை நீக்கிவிடுவார்களா? " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin Speech about Minister Jayakumar Pressmeet about CN Annadurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->