உண்மையை கூறினால் வழக்கா?. திமுக வழக்கறிஞர் அணி பேட்டி.!!
DMK lawyer team press meet 27 may 2020
தமிழகத்தில் கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக மாறி, சுமார் 11 ஆயிரம் பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், திமுக வழக்கறிஞர் அணியின் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், மருத்துவர்களுக்கு கொரோனா பரவி வரும் காரணமாக, அரசு அலட்சியத்தில் இருப்பது உறுதிபட தெளிவாகிறது.
மேலும், மருத்துவ உபகரணங்கள் சரிவர வழங்கப்படாததே இதற்கான மூல காரணம் ஆகும். இது குறித்த உண்மை தகவலை பதிவு செய்யும் பட்சத்தில், திமுகவினர் மீது பொய்யான வழக்கு தொடுக்கப்படுகிறது.
இந்த விஷயம் குறித்து பல தகவல்கள் செய்திகள் மூலமாக தொடர்ந்து வெளியாகி வருகிறது. உண்மை பதிவுகளின் காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எங்களது புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொள்ளவதாக தெரிவித்தனர் என்று கூறினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
DMK lawyer team press meet 27 may 2020