எங்க அண்ணனை போல முடியுமா?.. முதல்வரெல்லாம் சும்மா... எல்லாம் பொய் - கனிமொழி பேச்சு.!
DMK Kanimozhi MP Election Campaign 11 Feb 2021
தமிழகத்தில் நடைபெறவுள்ள மே மாத சட்டப்பேரவை தேர்தலில் எப்படியாவது வெற்றியை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன், திமுக கட்சி முக்கிய நிர்வாகிகளை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள களமிறக்கியுள்ளது.
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி மூலமாக திமுக மாநில மகளிரணி செயலாளர் எம்.பி. கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று திருபீபுர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதன்போது கனிமொழி பேசுகையில், " தேர்தல் சமயத்தில் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி உங்களை (மக்களை) சந்தித்து வருகிறார். திமுக தலைவர் மு.க ஸ்டாலினை பின்தொடர்ந்து செல்வதே அதிமுகவினரின் பணியாக மாறிவிட்டது.
திருப்பூரில் நடைபெற்ற விழாவில் முதல்வருக்கு குடிமராமத்து நாயகன் என்ற பட்டத்தை வழங்குகிறார்கள். காகிதத்தில் மட்டுமே அதனை வழங்கலாம். உண்மையில் குளங்களில் நீர் தேங்கி நிற்காமல், வயல்வெளி பகுதிகளில் நீர் தேங்கி வருகிறது.
அரசின் செலவினங்கள் குறித்து பொய்யான கணக்குகளை காண்பிக்க குடிமராமத்து பணியை செய்து வருகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு துளியளவும் பலன் இல்லை. ரேஷனில் தரமான பொருட்கள் கிடைக்கவில்லை. விவசாயிகளின் உண்மையான தோழன் திமுக தான் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
DMK Kanimozhi MP Election Campaign 11 Feb 2021