மாஸ் அருளாசி கொடுத்த விபூதி சித்தர்.. கொண்டாட்டத்தில் துரைமுருகன்..!
DMK Durai Murugan Meets Mahadevamalai Sithar
திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன், தனது மகன் கதிர் ஆனந்துடன் மகாதேவமலையை சார்ந்த சாமியாரை சந்தித்து ஆசி பெற்று, தமிழகத்தில் உச்ச பதவியில் துரைமுருகன் வருவார் என்று அருள்வாக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, சித்தரின் அருள்வாக்குப்படியே துரைமுருகன் அமோக வெற்றி பெற்றார். அன்பழகனின் மறைவுக்குப் பிறகு துரைமுருகன் திமுக பொதுச்செயலாளர் பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகனுடன் செப்டம்பர் 14 ஆம் தேதியன்று மகாதேவமலை விபூதி சாமியாரை சந்தித்துள்ளனர்.
ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்த சாமியார், தமிழகத்தில் புதிய பதவி கிடைக்கும் என்றும் அருள் வாக்கு கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த மலை காட்பாடியிலிருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த சித்தருக்கும் துரைமுருகனிற்கும் பல வருடங்களாக பழக்கம் இருக்கும் நிலையில், அந்த சித்தர் அனைவரையும் வாடா போடா என்று அழைப்பதாகவும் தெரியவருகிறது. மேலும், வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இவர் நீராடுவார் என்பதால், உடல் முழுவதும் விபூதியுடன் பயங்கரமான சாமியார் போலவும் காட்சி அளித்துள்ளார்.
துரைமுருகன் மற்றும் அவரது மகன் இருவரும் சாமியாரை தேடி சென்று வாழ்த்து பெற்றுள்ளனர். துரைமுருகன் திமுகவின் ஆட்சி அதிகாரத்தில் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
DMK Durai Murugan Meets Mahadevamalai Sithar