போஸ்டர் ஒட்டுவதில் தகராறு.. பாஜக மகளிரணி - திமுக மோதல்.. நங்கநல்லூரில் பரபரப்பு.!
DMK BJP Woman Team fight Chennai due to Poster Problem
சென்னையில் ஒருதரப்பு ஆளுமை உள்ள இடங்களில், மற்றொரு தரப்பு கட்சியினர் சுவரொட்டி ஓட்டுவதில் பல வருடமாக பிரச்சனை நடந்து வருகிறது. இதனால் பல அடிதடி சம்பவங்களும், கொலை சம்பவங்களும் கூட நடந்துள்ளது.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் வெகுவிமரிசையாக கொண்டாடி வந்த நிலையில், கட்டுப்பாடுகளை மீறி கூட்டம் கூட்டப்பட்டதாக கூறி அக்கட்சியினர் மீதும், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் மீதும் சென்னை காவல் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா தொடர்ந்து சிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் பாஜக மகளிரணி கூட்டம் நடைபெற்றது. இதற்காக அங்குள்ள சுவர் பகுதிகளில் பாஜக போஸ்டர் ஒட்டப்பட்டது.
இதனை அறிந்த திமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, பாஜக மகளிரணியிரணுடன் பிரச்சனை செய்துள்ளனர். தங்கள் பகுதிக்குள் பிற கட்சியின் போஸ்டர் ஒட்டக்கூடாது என்றும் பிரச்சனை செய்துள்ளனர். இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், பாஜக கட்சியை சார்ந்த பெண்களை திமுகவினர் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, திமுகவினரை அப்பகுதியில் உள்ள இல்லத்தில் அடைத்து வைத்தனர்.
பாஜகவினரையும் அப்பகுதியில் அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கிய நிலையில், தொடர்ந்து வாக்குவாதம் நிலவி வந்தது. மேலும், பெண்களை தாக்கிய திமுகவினர் 5 பேர் முதற்கட்டமாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
DMK BJP Woman Team fight Chennai due to Poster Problem