அவசர அறிவிப்பை வெளியிட்ட திமுக.! விறுவிறுப்பான தொண்டர்கள்.!!
dmk announced protest
ஜூன் 24, திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் குடிநீர் பஞ்சத்தைப் போக்கிட வலியுறுத்தும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத் தலைநகர் சென்னையில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்காக பெண்கள் குடங்களுடன் இரவு முழுவதும் விழித்திருக்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலிக் குடங்களுடன் அலைகிறார்கள்.
சென்னையில் தண்ணீரின்றி பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிக் குழந்தைகளை, பள்ளிக்கூடங்களில் கழிவறைக்குத் தண்ணீர் கொண்டுவரச் சொல்கிற அவலநிலை. இவ்வளவு துயரங்களுடன் மக்கள் உள்ள நிலையில், இதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்படுகிறது.
மக்களின் குடிநீர் தேவையைப் போக்கிட போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றிட, ஆளும் அதிமுக அரசை வலியுறுத்தும் வகையிலும் குடிநீர் பஞ்சத்தைப் போக்கிட வலியுறுத்தும் வகையிலும் சென்னை, சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை அருகில், ஜூன் 24, திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலும், மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் என்னுடைய முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது", என ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.