மேடையில் வாக்குவாதம் நடத்திய திமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளியை அடுத்த மல்லகுண்டா தாசிரியப்பனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் திமுக கட்சியின் மாவட்ட பொறுப்பாளருமான தேவராஜ் கலந்துகொண்டார். இந்த தகவலறிந்து அதிமுக வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அப்பள்ளிக்கு வந்தார்.

அப்போது விழா மேடையில் இருந்த திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சூரியகுமார் பொறுப்பாளர் தேவராஜ் ஆகியோரிடம் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் எப்படி வரலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து, திமுக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சூரியகுமார், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரை விழா மேடையில் அமரச் சொல்லி சமாதானம் பேசினார்.

இந்நிலையில், மேடையில் இருந்து அதிமுக கட்சி தொண்டர்களுடன் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மேடையை விட்டு வெளியே சென்றார். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழாவில் மாணவர்கள் மத்தியில் விழா மேடையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதனால் திமுக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் விழாவை நடத்தி முடித்து விட்டு சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK and ADMK MLAs argument on the stage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->