அமைச்சருக்கும், திமுக எம்.எல்.ஏ க்கும் இடையே மோதல்..! கலெக்டர் முன்பே கலவரம்.!  - Seithipunal
Seithipunal


திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு இடையே பல காலங்களாக மோதல்கள், குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள், கண்டன அறிக்கைகள் என அன்றாடம் நடந்து வரும். தமிழகத்தில் இருக்கும் பல கட்சிகளும் அதிமுகவுடன், திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் இரு கட்சிகளும் ஒருமுறை கூட கூட்டணி வைக்க முடியாத அளவிற்கு இரண்டும் எதிர்கட்சிகள் ஆகவும், எதிரிகளாகவும் இருந்து வருகின்றது.

இந்நிலையில், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது. அமைச்சர் கே சி வீரமணி மற்றும் திமுக எம்எல்ஏ நந்தகுமார் ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே இந்த வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பிற்கும் இடையே கைகலப்பு உருவாகும் அளவுக்கு பிரச்சனை சென்றதால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. ஆட்சியர் முன்னிலையிலேயே அமைச்சரும், எம்எல்எம் மோதிக் கொள்வது மிகவும் மோசமானது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk admk fight for dam


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->