மிக முக்கிய செய்தியை வெளியிட்ட தமிழக அரசு.! தமிழக மக்களே உஷார்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் துவக்க விழா இன்று (12.11.2020) காலை 9.30 மணியளவில் கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்தில் வாரிய தலைவர் வெங்கடாசலம், முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் விழிப்புணர்வு பிரச்சார ஊர்திகளை தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா, கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்ட வாழ்வாதரங்கள் பெருமளவில் மாசுபடுகின்றன.

சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் கீழ்கண்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது :-

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைபிடிக்க வேண்டியவை

1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

2. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை

1. அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம்.

2. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

3. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழாவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் எஸ்.செல்வன் மற்றும் வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இப்பிரச்சார ஊர்திகள் மூலம் சென்னை மாநகரின் 15 மண்டலங்களிலும் இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிரச்சார ஊர்திகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை காலத்தில் சுற்றுச்சூழல் காற்று தரம் குறித்து கண்காணிக்கும் பொருட்டு, சென்னை மாநகரில் பதினைந்து இடங்களிலும், மாநிலத்தில் உள்ள 14 மாநகராட்சி பகுதிகளிலும் (தலா இரண்டு இடங்களில்) 07.11.2020 முதல் 21.11.2020 வரை மொத்தம் 14 நாட்கள் காற்று தர அளவீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் நடமாடும் தொடர் காற்றுத் தர கண்காணிப்பு நிலையம் (Mobile Continuous Ambient Air Quality Monitoring Station) மூலம் அளவீடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்புள்ளி விபரங்களைக் கொண்டு காற்றுத் தர குறியீடு (Air Quality Index - AQI) கணக்கிடப்பட்டு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்படும்".
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diwali rule for tn


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->