#Breaking: தமிழகத்தில் மாவட்ட வாரியான கரோனா பாதிப்பு பட்டியல்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அரசின் சார்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று கரோனாவால் 447 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளது. இன்று 64 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,240 ஆக உயர்ந்துள்ளது. இன்று 2 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 5,262 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 363 பேருக்கு கொரோனா உறு3தியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,625 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 9 பேருக்கும், திருவள்ளூரில் 15 பேருக்கும், திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் தலா 8 பேருக்கும், கன்னியாகுமரியில் 5 பேருக்கும், திருநெல்வேலியில் 3 பேருக்கும், பெரம்பலூரில் 4 பேருக்கும், தூத்துக்குடி, தேனி, தென்காசி, ராமநாதபுரம், கரூர், திண்டுக்கலில் தலா ஒருவருக்கும், மதுரையில் இரண்டு பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. 

மேலும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த கரூரில் ஒருவருக்கும், மதுரையில் 7 பேருக்கும், சிவகங்கையில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் இரண்டு பேருக்கும், திருநெல்வேலியில் 13 பேருக்கும், ஏர்போர்ட் கண்காணிப்பில் 9 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

District vise tamilnadu corona update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->