பணியில் இருந்த தன்னார்வலருக்கு குடிகாரனால் நேர்ந்த சோகம்.. துடிதுடிக்க அரங்கேறிய பயங்கரம்.!!
Dindugal police volunteer youngster murder by drinking culprit
திண்டுக்கலில் மதுபோதையில் வாகனம் ஒட்டியதை கண்டித்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காமராஜபுரம் பகுதியை சார்ந்தவர் ரவீந்திரன்.
இவர் தாமாக முன்வந்து தற்காலிக காவல் அதிகாரியாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று அங்குள்ள காமராஜபுரம் பகுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார். இந்த சமயத்தில், அதே பகுதியை சார்ந்த ஷேக் முகமது மது அருந்திவிட்டு வாகனம் இயக்கி வந்துள்ளார்.
ஷேக் முகம்மதை ரவீந்திரன் கண்டித்த நிலையில், இதனால் ஆத்திரமடைந்த ஷேக் ரவீந்திரனை கொலை செய்துள்ளார். மேலும், படுகாயமடைந்து உயிருக்கு துடிதுடித்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக ரவீந்திரன் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஷேக் முகம்மதை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Dindugal police volunteer youngster murder by drinking culprit