கொரோனா பாதித்த நிலைமையிலும் அஜாக்கிரதை.. தன் தலையில் தானே மண்ணை வாரி தூற்றிய வாலிபர்.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி கலையாம்புத்தூர் அக்ரஹாரம் பகுதியை சார்ந்த மின்வாரிய பொறியாளர், தனது 40 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோயம்புத்தூரில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இதனையடுத்து, அவரையும், அவரது குடும்பத்தினரையும் தனிமையில் இருக்குமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்திய நிலையில், இது தொடர்பாக அக்கம் பக்கத்திடம் கூறாமல் அலட்சியமாக குடும்பத்தினர் இருந்து வந்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர், வாலிபரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரச்சொல்லி அழைத்துள்ளனர்.. ஆனால் அவர் சிகிச்சைக்கு வர மறுப்பு தெரிவிக்கவே, கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டும் விடுத்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறையினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சுகாதாரத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அறிவுரை வழங்கி வீட்டில் இருக்க வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று வாலிபர் திடீரென உயிரிழந்துள்ளார். 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவரது உடலை கைப்பற்றி பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்தனர். மேலும், சுகாதாரத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அறிவுரையை ஏற்றால் அவரது உயிர் தப்பித்து இருக்கும் என்று அப்பகுதி மக்கள் வேதனையும் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Youngster died corona virus due to irresponsible Behavior


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->