காவல் அதிகாரிகள் மீது கொலைவெறி தாக்குதல்.. மதுபோதை புள்ளிங்கோஸ் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் வத்தலகுண்டு வீறுவீடு சோதனைச்சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த நிலையில், மதுபோதையில் வந்த இளைஞர்களிடம் காவல் அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். 

இதன்போது, அவர்கள் வாகனத்தை பறிமுதல் செய்வது உறுதியான நிலையில், இளைஞர்கள் காவல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வீடியோ தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளது. 

இதனைப்போன்று, சேலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த காவல் அதிகாரியை, அங்குள்ள கிராம பகுதியை சார்ந்த செல்வபாண்டியன் என்பவன் முகக்கவசம் அணியாமல் வந்து, தகராறு செய்து உயிரோடு பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுவேன் என்று காவல் அதிகாரியை மிரட்டி சென்று இருக்கிறான். 

அவனின் மீது வழக்குப்பதிவு செய்து, செல்வபாண்டியனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காவல் அதிகாரிகள் தாக்குதலில் மக்கள் எங்கோ உயிரிழக்க, அதே வேளையில் மற்றொருபுறம் காவல் அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தும் கொடூரங்கள் நிகழ்ந்து வருகிறது. அராஜக கும்பலிடம் காவல் துறையினர் வீரத்தை காண்பித்தால் மக்கள் எந்த ஆத்திரமும் படமாட்டார்கள். மனித உரிமை ஆணையத்தை நீங்கள் உங்களின் விதத்தில் பதில் சொல்லிக்கொள்ளலாம். 

தவறு இளைத்தவர்கள் பாத்ரூமில் அனைவரும் தவறி விழ வாழ்த்துக்கள்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Vathalagundu Police Attacked by Drunken Culprits Police Investigation Going On


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->