திண்டுக்கல்: மதுபோதையில் அதிவேக பயணம்.. சுகாதார ஆய்வாளரின் செயலால் சாலையோரம் நின்ற 2 பேர் பலி.!
Dindigul Vadamadurai Health Inspector Drive Liquor Alcohol Drinks make Accident 2 Died 21 June 2021
வேடசந்தூரில் மதுபோதையில் சுகாதார ஆய்வாளர் ஓட்டி வந்த கார் விபத்தில் சிக்கி, அதனால் 2 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் வடமதுரை சுகாதார அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பாலகுமார். இவர் நேற்றிரவு தனது காரை குடிபோதையில் அதி வேகமாக ஓட்டி வந்துள்ளார்.
இவரது கார் வடமதுரை சாலையில் வருகையில் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதன் பின்னரும் தறிகெட்டு ஓடிய அந்த கார், அருகே கொட்டப்பட்டு இருந்த மணல் குவியலில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த பழனிச்சாமி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ஒருவரும், மருத்துவமனையில் ஒருவரும் என இரண்டு பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
போதையில் காரை ஓட்டி வந்த சுகாதார ஆய்வாளர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Dindigul Vadamadurai Health Inspector Drive Liquor Alcohol Drinks make Accident 2 Died 21 June 2021