திண்டுக்கல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.! கொலையாளி யார் தெரியுமா.?
dindigul small girl rappe case
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஜி.குரும்பபட்டியில் 7ம் வகுப்பு மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தாள் சிறுமி வாயில் மின் வயரை கடித்த நிலையில் இறந்து கிடந்தார் அவரது உடலில் பல இடங்களில் கீறல்களும் ரத்த காயமும் இருந்தது இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது வீட்டுக்கு அருகே உள்ள 3 சிறுவர்களே இதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்நிலையில், போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், சிறுமியைக் கொன்றது அதே பகுதியைச் சேர்ந்த கிருபானந்தன் என தெரியவந்தது. பிளஸ் 2 படித்துள்ள அவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் உயிருக்குப் போராடிய சிறுமியை மின்சாரம் பாய்ச்சி கொடூரமான முறையில் கொன்றதாக போலீஸ் விசாணையில் தெரியவந்துள்ளது மேலும் யாருக்காவது சிறுமி கொலையில் தொடர்பு உள்ளதா என போலீஸ் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது
English Summary
dindigul small girl rappe case