திண்டுக்கல்: பழச்சாறில் மது கலந்து குடித்த வாலிபர் மரணம்.. 6 மாத கர்ப்பிணி மனைவி கண்ணீர்.! - Seithipunal
Seithipunal


மதுவுடன் பழச்சாறு கலந்து குடித்த ஒருவர் பலியாகிவிட, மற்றொருவர் உயிருக்கு போராடிவரும் சோகம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவரின் மனைவி 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பெரிச்சிபாளையம் பகுதியை சார்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் வெங்காய வியாபாரியாக இருந்து வருகிறார். இவரது மனைவி சிந்து (வயது 26). சிந்து தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். 

இந்நிலையில், மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் யோகேஸ்வரன் (வயது 21), விவேகானந்தன் (வயது 26), வசந்த் (வயது 25) ஆகியோர் சேர்ந்து அப்பகுதியில் நடைபெற்ற தேர்தல் வேட்பாளர் பிரச்சார கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் 4 பேரும் சேர்ந்து மது அருந்திய நிலையில், தாங்கள் தயார் செய்து வைத்திருந்த பழரசத்தை சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இதன்போது திடீரென மணிகண்டன் மற்றும் யோகேஸ்வரன் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

நண்பர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுவதை கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் அலறவே, விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே, உயிருக்கு போராடிய யோகேஸ்வரனை மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். யோகேஸ்வரனுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கீரனூர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மது நாட்டிற்கும், வீட்டிற்கும், உடல்நலத்திற்கும் கேடு என்பது குறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும், மதுவால் ஒவ்வொரு வீட்டில் ஏற்படும் உயிரிழப்பு வரை அதனை அலட்சிப்படுத்தியே பலரும் அருந்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Palani Drunken Youngster Died due to Poison He Add Liquor Alcohol with Fruit Juice


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->