சீட்டாவுக்கே சீட்டிங்.! ராஜதந்திரத்துடன் சிக்கவைத்த வனத்துறை.. சிறுத்தை குட்டி அடிபட்டு பிடிபட்டு செத்தது.!
Dindigul Palani Cheetah Tripped by Forest Officers Using Saree Wall to Cheat Cheetah
மாந்தோப்பில் புகுந்த சிறுத்தையை சேலையை வேலியாக பயன்படுத்தி வனத்துறையினர் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அண்ணா நகர் உள்ளது. இந்த அண்ணா நகர் பகுதியைச் சார்ந்தவர் மயில்சாமி. இவரது மாந்தோப்பில் புகுந்த சிறுத்தை அமைதியாகப் படுத்து இருந்த நிலையில், அது முன்னதாகவே எங்கோ கீழே விழுந்து அடி வாங்கி வந்தது உறுதியானது.
இதனையடுத்து, இது தொடர்பாக தீயணைப்பு துறையினர் மற்றும் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க முயற்சித்துள்ளனர். அங்குள்ள தோப்பில் பதுங்கி இருந்த சிறுத்தையை பிடிக்க பெரிய வலைகளுடன் அதிகாரிகள் காத்துள்ளனர்.
சேலையை சுவர் போல மாய திரையை எழுப்பி, காயத்துடன் படுத்திருந்த சிறுத்தை சுவற்றுக்குள் இருப்பது போல சித்தரித்து, ஒருபுறம் தீயணைப்பு துறையினரும் மற்றொருபுறம் வனத்துறையினரும் வலையுடன் காத்திருந்தனர். அதிகாரிகளின் காலடிச்சத்தம் கேட்டு சீறிப்பாய்ந்து வந்த சிறுத்தை, அடுத்த நொடியே வலையில் சிக்கி மாட்டிக் கொண்டது.
காயத்துடன் இருந்த சிறுத்தையை பிடித்த அதிகாரிகள் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அது பலியானது. சிறுத்தையின் உயிரிழப்புக்கான காரணத்தை வனத்துறையினர் அறிய முயற்சித்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Dindigul Palani Cheetah Tripped by Forest Officers Using Saree Wall to Cheat Cheetah