கணவன் கண்முன்னே மனைவியை விடுதிக்குள் தூக்கிச்சென்று சீரழித்த கொடும்பாவிகள்.. பழனியில் பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


பழனியில் கேரளாவை சார்ந்த 40 வயது பெண்மணி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பரபரப்பு தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் உள்ள கண்ணூர் பகுதியை சார்ந்த 40 வயது பெண்மணி, தனது கணவருடன் கடந்த மாதம் 19 ஆம் தேதி திண்டுக்கல்லில் உள்ள பழனிக்கு வருகை தந்துள்ளார். கணவன் - மனைவி இருவரும் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் ஊருக்கு புறப்பட தயாராகினர். இதன்போது, பழனி பழைய பேருந்து நிலையத்தை நோக்கி தம்பதிகள் சென்ற போது, பெண்ணின் கணவர் அருகேயுள்ள கடைக்கு சென்றுள்ளார். இதன்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் பெண்ணை கடத்தி செல்ல முயற்சித்துள்ளது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் கணவர் அவர்களை தடுக்க முயற்சித்தும் பலனில்லாத நிலையில், பெண்ணின் கணவரை தாக்கிய மர்ம கும்பல் பெண்ணை அருகேயுள்ள விடுதிக்கு தூக்கி சென்று இருக்கிறது. பெண்ணின் கணவர் தனது மனைவியை காப்பாற்ற விடுதிக்குள் செல்ல முயற்சித்த சமயத்தில், விடுதியில் இருந்த நபர்கள் அவரை அடித்து துரத்திவிட்டுள்ளனர். இதனால் பெண்ணின் கணவர் இரவு முழுவதும் விடுதியை சுற்றி வந்தபடியே தவித்து இருந்துள்ளார். 

மறுநாள் காலையில் பெண்மணி விடுதியில் இருந்து தப்பி கணவரிடம் வந்துவிடவே, தன்னை கடத்தி சென்ற 3 பேரும் தன்னை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததாக கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் அங்குள்ள பழனி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் எந்த விதமான விசாரணையும் நடத்தாமல் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இதன் பின்னர் பெண்மணி கணவருடன் கண்ணூருக்கே திரும்பிய நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை பெற பெண்மணி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவர்களிடம் தனக்கு நேர்ந்த கொடூரத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த கண்ணூர் காவல் துறையினர் பெண்ணிடம் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து பழனிக்கு விரைந்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Palani 40 Aged Kerala Kannur Native Woman Sexual Abuse by Gang Police Investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->