கள்ளகாதலனின் 5, 10 க்கு ஆசைப்பட்டு கணவன் கொடூர கொலை.. தற்கொலை நாடகத்தில் கயிரறுந்த உண்மை.! - Seithipunal
Seithipunal


கள்ளக்காதலுக்கு கணவனை மனைவி பலி கொடுக்க, தலைமறைவாகியுள்ள கள்ளக்காதலனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகேயிருக்கும் கே.குரும்பபட்டி பகுதியை சார்ந்தவர் சென்ராயன் (வயது 39). இவர் விவசாயி ஆவார். இவரது மனைவி வனிதா. இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி அதிகாலை வீட்டிலேயே சென்ராயன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக நிலக்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். இதற்குள்ளாக, சென்ராயனின் தந்தை மொக்க ராஜ், தனது மகனின் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும், மருமகள் தனது மகனை கொலை செய்து தற்கொலை என நாடகமாடுகிறார் எனவும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் பாலகுரு தலைமையிலான காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சென்ராயனின் மனைவி வனிதா முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்துள்ளார்.

பின்னர், காவல் துறையினர் கிடுக்குபிடி விசாரணை நடந்தியுள்ளனர். இந்த விசாரணையில், சென்ராயனின் கொலை உறுதியானது. இதுதொடர்பான வனிதாவின் வாக்குமூலத்தில், எங்களது வீட்டிற்கு அருகே வசித்து வந்த அய்யனார் (வயது 50) என்பவருக்கும், எனக்கும் இடையே கள்ளக்காதல் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தோம். இந்த விஷயம் எனது கணவருக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் எங்களை கண்டித்தார். 

அய்யனாரை பொறுத்தளவில், அவர் வத்தலகுண்டு அரசுப்பள்ளியில் பணியாற்றி வருவதால் செலவுக்கு பணம் தருவார். நானும் பணத்திற்கு ஆசைப்பட்டு, அவருடன் கள்ளக்காதல் உறவை தொடந்து வந்தேன். எனது கணவர் தொடர்ந்து இதற்கு இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். சம்பவத்தன்று எனது கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது போல் சித்தரிக்க கயிற்றில் கட்டி தொங்கவிட்டேன். மறுநாள் காலையில் எனது கணவர் தற்கொலை செய்துகொண்டார் என ஊரைக்கூட்டி நம்பவைத்த நிலையில், எனது மாமனாருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவர் கொடுத்த புகாரில் நடைபெற்ற விசாரணையால் நான் சிக்கிக்கொண்டேன் " என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வனிதாவை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அய்யனாருக்கு திருமணம் முடிந்து குழந்தை உள்ள நிலையில், அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சமயத்தில் வணித்தவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சென்ராயனின் கொலையில் அய்யனாருக்கும் தொடர்பு இருப்பதால், அய்யனாரையும் காவல் அதிகாரிகள் தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Nilakottai Husband Sentrayan Murder by Wife Vanitha due to Affair Issue Police Arrest Lady


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->