உறவினரை கொலை செய்து விபத்து என நாடகம்.. திண்டுக்கல்லில் வாலிபர் கைது.!
Dindigul Murder Police Investigation 22 June 2021
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி பகுதியை சார்ந்தவர் கணேசன் (வயது 50) மற்றும் கார்த்திக் (வயது 35). இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்கள். இருவரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் உப்புத்துறைப்பாளையம் பகுதியில் தங்கியிருந்து சாக்கு குடோனில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று உப்புத்துறைப்பாளையம் பகுதியில் செல்கையில் இருசக்கர வாகனத்தில் இருந்து கணேசன் தவறி விழுந்து அடிபட்டுவிட்டதாக கூறி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கணேசனை கார்த்திக் அனுமதி செய்துள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இது விபத்தில் ஏற்பட்ட காயம் இல்லை என்பதை உறுதி செய்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாராபுரம் காவல் துறையினர் கார்த்தியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கணேசன் கார்த்திகை கீழே தள்ளி மயக்கமடைந்து தெரியவந்துள்ளது. மேலும், குடும்பத்தினரிடமும் இதே தகவலை அவர் தெரியப்படுத்தி இருக்கிறார்.
விசாரணையின் போதே கணேசனால் தாக்கப்பட்ட கார்த்திக் உயிரிழந்ததால், கார்த்திக்கை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Dindigul Murder Police Investigation 22 June 2021