கல்லூரி மாணவியுடன் எஸ் ஆன, 2 குழந்தைகளின் தகப்பன்... திண்டுக்கல்லில் பதற்றம்.!!
Dindigul Married man escape Girl Student Police Investigation
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி செட்டியபட்டி பகுதியை சார்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் கருப்பசாமி (வயது 36). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெண்மணி, தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், கருப்பசாமிக்கு இதே பகுதியை சார்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து இவர்கள் இருவரும் வீட்டினை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனையறிந்த இரண்டு வீட்டாரும் அதிர்ச்சியான நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கருப்பசாமியின் வீட்டிற்கு மர்ம நபர்கள் தீவைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமியின் தரப்பினர் பெண்மணியின் இல்லத்திற்கும் தீ வைத்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கும் நிலையில், பதற்றம் காரணமாக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு குழந்தைகள், மனைவி இருந்தும் மாணவியின் மீது ஏற்பட்ட மோகம் நாடக காதலே.. இளம் வயதில் பெண்கள் தங்களின் வாழ்க்கையை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் கொடூரம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Dindigul Married man escape Girl Student Police Investigation