காதலனுடன் சென்ற தங்கை.. கல்லைத்தூக்கி அடித்த பெண்ணின் அண்ணன்.. திண்டுக்கல்லில் பரபரப்பு.!
Dindigul Love Murder Police Investigation 22 June 2021
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் புதுப்பட்டி பகுதியை சார்ந்தவர் சேதுராஜன். இவரது மகன் பாரதி ராஜா (வயது 21). இவர் மூங்கில்பட்டியில் இருக்கும் முல்லைநகர் பகுதியை சார்ந்த ராசு என்பவரின் மகளான பரமேஸ்வரி (வயது 20) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் ஒரே சமூகம் என்று கூறப்படும் நிலையில், இருவரின் காதல் விவகாரத்திற்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பரமேஸ்வரிக்கு வரன் பார்த்து திருமணம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த விஷயத்தை பரமேஸ்வரி பாரதிராஜாவுக்கு தெரியப்படுத்தவே, பாரதிராஜா இருசக்கர வாகனத்தில் காதலியின் வீட்டிற்கு நேற்று இரவு சென்று, பரமேஸ்வரியை அழைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
தங்கை காதலனுடன் செல்வதை அறிந்த பரமேஸ்வரியின் அண்ணன் மலைச்சாமி மற்றும் உறவினர்கள், காதல் ஜோடியை இடைமறித்து பாரதி ராஜாவிடம் தகராறு செய்துள்ளனர். இதன்போது ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மலைச்சாமி கீழே இருந்த கல்லை எடுத்து பாரதிராஜாவை அடித்துள்ளார்.
நிலைகுலைந்து கீழே விழுந்த பாரதி ராஜாவை கண்டு அதிர்ச்சியடைந்த சக உறவினர்கள், உடனடியாக அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து பாரதிராஜாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக நத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பாரதிராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காதலியின் அண்ணன் மற்றும் உறவினர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Dindigul Love Murder Police Investigation 22 June 2021