நள்ளிரவில் தேநீர் கொடுக்க மறுத்த பெண்மணி கொடூர கொலை.. திண்டுக்கல்லில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செட்டிநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்த பெண்மணி மீனாட்சி (வயது 50). இவர் தனியாக வசித்து வந்த நிலையில், தேநீர் கடை நடத்தி வந்துள்ளார். இவர் இரவு வியாபாரம் முடிந்ததும், நேற்று கடையினை மூடிவிட்டு அங்கயே படுத்து உறங்கியுள்ளார். 

அப்போது நள்ளிரவில் அங்கு மதுபோதையில் வந்த கொடூரன் தேநீரை கேட்டு மீனாட்சியை எழுப்பியுள்ளான். தூக்கத்தில் இருந்த மீனாட்சி, கடையினை பூட்டிவிட்டதாக கூறி, மறுநாள் காலையில் தேநீர் விற்பனை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கொடூரன், அங்கிருந்த அரிவாளை எடுத்து வெட்டி கொலை செய்துள்ளான். அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், மீனாட்சி கொலை செய்யப்பட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

பின்னர் தப்பியோட முயன்ற இளைஞரை கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாக அடித்து நொறுக்கிய பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மீனாட்சியை கொலை செய்த பிரதீஸ் என்ற கொடூரனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Lady Murder By Drunken Culprit Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->