குளுகுளு சூழ்நிலையில் பொழுதை கழிக்கும் சுற்றுலாப்பயணிகள்.. கொடைக்கானலில் ஜோர்..!
Dindigul Kodaikanal Peoples Visited Leave Days
விநாயகர் சதுர்த்தி விடுமுறை மற்றும் சனி-ஞாயிறு வார விடுமுறை நாட்கள் அனைத்தும் சேர்ந்து வந்துள்ளதால், தொடர் விடுமுறையை இன்பமாக கழிப்பதற்கு மக்கள் சுற்றுலாத்தலங்களுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கங்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மன இறுக்கத்தை குறைக்க மக்கள் அதிகளவு சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில், மலைகளின் இளவரசியாக கருதப்படும் கொடைக்கானலில் குளுகுளு சீதோஷ்ணம் நிலவி வருகிறது.
இதனால் பொதுமக்கள் அங்கு அதிகளவு செல்ல தொடங்கியுள்ளனர். விடுமுறைகளை கருத்தில் கொண்டு மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதால், வெள்ளி நீர்வீழ்ச்சி நுழைவு வாயில் பகுதியில் 5 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
மோயர் பாயிண்ட், குணா குகை, தூண் பாறை, பைன் பாரஸ்ட், நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா உட்பட அப்பள பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் குடும்பத்துடன் இன்பமான பொழுதுகளை செலவிட்டனர். பல இடங்களில் தொடர்ந்து கூடியதால் சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற உத்தரவுகள் காற்றில் பறக்கவிடப்பட்டது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Dindigul Kodaikanal Peoples Visited Leave Days