மகளுக்கு குடிப்பழக்கத்தை பயிற்றுவித்த தந்தை.. சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த மாமன்.. கொடைக்கானலில் பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கொடைக்கானல் அருகே 15 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த மாமா உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஐயர்க்கண் பகுதியை சார்ந்தவர் மாலைக்கண் நோயாளி தேவதாஸ். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். 

மதுபானத்திற்கு அடிமையான தந்தை, தனது மகளுக்கும் சிறு வயதில் இருந்தே மதுபானத்தை குடிக்க கொடுத்து பழக்கப்படுத்தி இருக்கிறான். இதனால் சிறுமியும் மதுபானம் அருந்தி வந்த நிலையில், இந்த விஷயம் சிறுமியின் மாமா கண்ணன் என்பவனுக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, இதனை உபயோகம் செய்துகொள்ள நினைத்த கொடூரன் கண்ணன், தனது கூட்டாளிகளான ராஜ்குமார், மணிகண்டன் ஆகியோருடன் சேர்த்து சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இந்த விஷயம் நேற்று சிறுமி மதுபோதையில் உளறியதால் தெரியவந்துள்ளது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ராஜ்குமார், மணிகண்டன், கண்ணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Kodaikanal Child girl Sexual Abuse by Relations 16 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->